
யாழ்.நெட்டில் தொலைத்த எனது வலைப்பக்கங்களை மீட்கும் முயற்சி.
Courtesy:http://en.wikipedia.org/wiki/Where_Do_We_Come_From?_What_Are_We?_Where_Are_We_Going?
Courtesy:http://en.wikipedia.org/wiki/Where_Do_We_Come_From?_What_Are_We?_Where_Are_We_Going?
...மீண்டும் ஒரு முறை ரஷ்ய கவிஞர் செர்கய் யெஸ்னினின் கவிதை வரியுடன்தொடங்குகிறேன்
WHOM SHALL I CALL UPON TO SHARE THE WRETCHED HAPPINESS OF BEING ALIVE.
மேற்கண்ட வரிகள் வலைப்பக்கங்களுக்கும் பொருந்தும் போலும்.
மேலும் சில கவிதை வரிகள்...
ஒரு காலை முன்னாலும்
மற்றொரு காலை பின்னால் வைப்பதினாலேயே
நடை
சாத்தியமாகிறது.
(நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள், (1981)
தொகுப்பிலிருந்து)
1 …பாதையெல்லாம்முட்புதர்கள்
வெவ்வேறு கூர்மையுடன்…
2. …எல்லாம் அடைய முடியும் தூரத்தில்
இடையில்தடையாய்
எச்சில் பருக்கைகள்…3.
பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிறவக்கிரம்
அனைத்தையும்உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்துநிலைக் கண்ணாடி உடைக்கிற
என்கோபத்தைஉறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்குநீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலைஎன் வாயோரங்களிலிருந்து
துடைத்துக்கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.எஞ்சிய என் கருத்த கசடுகளின்ரகசிய அம்பு எய்யப்படக்காத்திருக்கிறது உன்
உந்திச்சுழி.குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன்
யோனியில்.அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்சொல்கிறார்கள்.வீட்டுக்கு வெளியில்நான் விடுகின்ற
மூச்சு(கல்யாண்ஜி கவிதைகள்,
தொகுப்பிலிருந்து).
மொத்தத்தில் எனது வலைத் தளம்,
நகுலனின் படைப்பு மொழி போல் பிறரின் மொழியூடாக எனது சாயையை(!)
கண்டறியும் ஓரு
நிகழ்வு.
மறைந்த நண்பர்கள்
மோகன், பாண்டி நினைவுகளுடன்
பதிய தொடங்குகிறேன்.
1 comment:
பின்னூட்டச் சோதனை
Post a Comment